Pages

Posted on: Tuesday, June 28, 2011

கல்கி வார இதழில் நிறைவேறிய எனது ஏக்கம்...

நன்றி கல்கி வார  இதழ் 03/07/2011


                                       ஏக்கம்


           
மாமர ஒற்றைக் கிளையில்


குயில் கச்சேரி...

தாவித் தாவி நடனமிடும்

அணில்...

மார்கழி காலை

குளிரில் போர்வைக்குள்

பூனைக்குட்டியாய்

கடைசி ஐந்து நிமிடத்

தூக்கம்...

ரசித்திட ஆசை...

ஞாயிறு வருமென

சமாதானம் சொன்னது

இயந்திர வாழ்க்கை!

3 comments:

சாந்தி மாரியப்பன் said...

கவிதை நல்லாயிருக்குது.. கல்கியில் வெளிவந்தமைக்கு வாழ்த்துகள்.

குடந்தை அன்புமணி said...

கல்கி புத்தகத்திலேயே படித்தேன். வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

மிக அருமை. வாழ்த்துக்கள்!

Post a Comment

 
Tweet