பயணத்திற்கு உதவாத மாய கப்பல் ……….!
| கனவுப் போலத்தான் |
| வாழ்க்கை ……! |
| கனவு விடிந்தால் |
| கரைந்து போகும் …. |
| வாழ்க்கை கனவு |
| கலைந்து எழுந்தால் |
| உடன் நடித்த ஒரு |
| கதாபாத்திரம் காணாமல் |
| பேயிருக்கும் ………! |
| பணம், பதவி, மரியாதையெல்லாம் |
| நாம் உண்ணும் உணவைப்போல், |
| ருசிக்க , ருசிக்க பசிக்கும் |
| ஆனால், |
| நிரந்தரமின்றி வீணாய்ப்போகும் ……..! |
| ஆயிரம் பேர் சூழ்ந்திருக்க |
| நான் யார் தெரியுமா? |
| என்று கேட்கும் ஆணவம் |
| அதே கேள்வியை |
| தனிமையில் தன்னை நோக்கி |
| கேட்க ’நான்’ |
| காணாமல் போயிருக்கும் …..! |
| காலுக்கு கீழ் அடிமையைப்போல் |
| கிடக்கும் பூமி, |
| -நிரந்தரமானது ……! |
| நானே எஜமான் என |
| மார்தட்டி திரிந்தவன் |
| மக்கி, மண்ணாய் அதே |
| பூமியோடு ஜக்கியமாவது |
| வாழ்வியல் சூத்திரம் …..! |
| உன்னை |
| எரிக்கலாம், |
| அல்லது, |
| புதைக்கலாம் ………. |
| இதுவரை நீ சேர்த்து வைத்த |
| சொத்துக்கள் …… |
| சொந்தங்கள் …. |
| பதவிகள் ….. |
| அதிகாரங்கள் …. |
| தம்பட்டங்கள் …. |
| அடுத்தவர்களின் வயிற்றெரிச்சல் … |
| ஆசிர்வாதங்கள் …. |
| ஏதேனும் துணைவருமா …. ? |
| தீ சுடும் …! |
| வாழ்ந்தோர் சொல்கேட்டும் |
| தெளியலாம் … |
| தொட்டுப்பார்த்தும் பாடம் கற்கலாம் ….! |
| ஆறடி நிலம் கூட |
| உறுதியில்லாத வாழ்வில், |
| கொண்டு போவதற்கு |
| என்ன இருக்கிறது ….? |
| வாழ்ந்த நாளில் |
| உனக்கு பயந்து எத்தனை பேர் |
| உன்னுடன் வந்தார்கள் |
| என்பது பெரிதில்லை ….. |
| உன் கடைசி யாத்திரையில் |
| கண்ணீருடன் வருகிறவர்களின் |
| எண்ணிக்கை |
| நீ வாழ்ந்த |
| வாழ்க்கையை சொல்லிவிடும் ….! |
| மனிதனாய் பிறப்பது எளிது …. |
| மிருகமாய் வாழ்வது எளிது ….. |
| தெரு நாயைப்போல் |
| செத்துப்போவது எளிது ….. |
| நீ |
| மனிதனா ….? |
| மிருகமா ….? |
| உன் கடைசி யாத்திரையில் |
| கண்ணீருடன் வருகிறவர்களின் |
| எண்ணிக்கை நீ வாழ்ந்த |
| வாழ்க்கையை சொல்லிவிடும் …. |

