Pages

Posted on: Wednesday, October 21, 2009

நானும், கலைமகள் மாத இதழும் - கல்லுக்குள் ஈரம் தேடும் நெஞ்சங்கள் ....

கலைமகள் - செப்டம்பர் ,1993 இதழில் வெளியான எனது கதை




Posted on: Thursday, October 15, 2009

கந்தக தீபாவளி ...!





கந்தக தீபாவளி ...!



பட்டாசு வெடித்து
தீபாவளி கொண்டாடுங்கள்...!

பட்டாசு சத்தம்
கந்தக பிஞ்சுக்களின்
கால் வயிற்று கஞ்சி...!

கந்தக கிடங்கில்
கருகிய மொட்டுக்களின்
பச்சை இரத்த வாசம்...

மகரந்த கனவுடன்
மொட்டோடு கருகிய
எதிர்கால....
மருத்துவர்...!
பொறியாளர்...!
விஞ்ஞானி ....!

கந்தக குளத்தில்
தன் சந்ததியாவது
மலரும் என்ற நம்பிக்கையில்,
பல செடிகள்
தலைமுறை,
தலைமுறையாய்.....
மலடாய்...!

விடிந்தால்
தீபாவளி....
எங்களுக்கும் தான்....!

கந்தகம் வெடித்து
சிதறும் சத்தத்தில்
எங்கள்
வயிறு சிரிக்கும்...!

கங்கா ஸ்நானம்
செய்யாவிட்டாலும்
கங்கைக்கு ஒன்றும்
பாதகமில்லை....

பட்டாசு சத்தம்
உங்களுக்கு வேடிக்கை...!
எங்களுக்கு
கால் வயிற்று கஞ்சி...!

Posted on: Thursday, October 8, 2009

வாலிபத்தின் தாய்மடி …!



வாலிபத்தின் தாய்மடி …!



தனிமை இனிக்கும் ...!
உனக்கே நீ பரிச்சயமாவாய்...!

சீரும் நாகத்தை கூட
அழகாய் இருக்கிறது
என்று இரசிக்க தோன்றும்...

இரவெல்லாம் கவி எழுத
முயன்று இறுதியில்
அவள் உருவம் வரைந்து
தலைப்பாய்
அவள் பெயர் எழுதி
பெரும் கவியாகிவிட்டதாய்
காலரை தூக்கிவிட்டுக்கொள்ளும் ....

மழலைக்கு தாய் ...!
இளைஞனுக்கு காதலி ..!
முழுமைக்கும் மனைவி ...!
காதலின் பரிணாமங்கள்..!

காதல் வாழ்க்கையின் மொழி ..!
கவிதை காதலின் வித்து ..!

குழந்தையாய் பிரசவிப்பவள் தாய் ...!
கவிஞனாய் மறு பிரசவிப்பவள் காதலி...!!

அதனால்,
காதலியுங்கள் ….

உனக்கே நீ
பரிச்சயமாக...
உன்னையே நீ
அறிந்துக்கொள்ள ....

காதல் வயப்படல் ஒன்றும்
பாவமில்லை ....
காமமில்லா காதலை
தாய்ப்பாசத்துடன் நீ
அணுகுவதாயின் ....!
 
Tweet