தினமலர் வாரமலர் 18/12/2022
Showing posts with label எஸ்.ஏ.சரவணக்குமார். Show all posts
Showing posts with label எஸ்.ஏ.சரவணக்குமார். Show all posts
Posted on: Tuesday, December 27, 2022
வா வாழ்ந்து பார்க்கலாம்....
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
10:22 AM
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
saravanakkumar,
saravanakumar,
அனுபவம்,
இதயம் பேசுகிறது,
எஸ்.ஏ.சரவணக்குமார்,
கவிதை,
காதல்
Posted on: Tuesday, December 6, 2022
பயணத்திற்கு உதவாத மாய கப்பல்...
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
1:26 AM
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
kavithai,
saravanakkumar,
saravanakumar,
இலக்கியம்,
உரத்த சிந்தனை,
எஜமான்,
எஸ்.ஏ.சரவணக்குமார்
Posted on: Wednesday, April 30, 2014
முகத்தில் முகம் பார்த்து நான் இலக்கியவாதியான கதை……
என்பதுகளின் இறுதியில்,
தொன்னுறுகளின் ஆரம்பகாலம், இனிய என் இனிய மாணவ பருவத்தில் ….. இலக்கிய எழுத்தாளர்களை அன்னாந்து பார்க்கப்பட்ட
காலகட்டம்,
எனக்கு தெரிந்த
இலக்கியம் எல்லாம் இரண்டு மதிப்பெண் தரும் நேர் நேர் தேமா, நிறை நேர் புளிமா ……, அதில்
கூட இந்த புளிமா மேல எனக்கு ரொம்ப நாளா ஒரு ‘ட்வுட்டு’ அப்புறம் ரொம்ப நாள் கழித்துத்தான் தெரிந்தது, பள்ளிகூட
வாசல்ல பாட்டி விற்கிற புளிச்ச மாங்காவுக்கும் இந்த புளிமாவுக்கும் சம்பந்தமில்லைன்னு
…..
நமக்கு தெரிந்த
இலக்கியம் எல்லாம் அன்னைக்கும், இன்னைக்கும் அவ்ளோ தான்,
அப்படிப்பட்ட காலகட்டத்துலத்தான்
ஒரு லைப்ரரில முகம் மாத இதழ் அறிமுகமானது,
படிக்க படிக்க ஏதோ ஒன்று என்னை தன் பால் இழுக்க, அதற்கு முந்தைய இதழை எல்லாம்
லைப்ரரியன்கிட்ட கெஞ்சி பழைய ஸ்டோர் ரூமை கிளரி படித்த போது ஒரு இதழில் நல்ல இலக்கியத்தரமான
சிறுகதைகளை அனுப்பி வைக்கும்படி அதன் ஆசிரியர் திரு,மாமணி அவர்கள் சிறு குறிப்பு வெளியிட்டு
இருந்தார், கூடவே போன் நம்பர், முகவரி,
திரும்ப அந்த இலக்கியம்ன்ற
அல்ஜிப்பிரா ( நமக்கு ரெண்டும் ஒன்னுத்தான் )
மண்டைய குடைய வெளிய வந்து பொது தொலைபேசியில் இருந்து டிரிங் ,,, டிரிங் ,,,
“முகம் மாத இதழா…?”
“நீங்க”
“….. எனக்கு கதை
எழுத ஆசை ,,, இலக்கியம்னா என்னன்னு தெரியாது …. என் கதையை முகத்துல வெளியிடுவீங்களா…?”
“தம்பி நான் ஆசிரியர்
மாமணித்தான் பேசுற ….நீங்க என்ன பண்றீங்க? “
“பச்சையப்பன் கல்லூரில
படிக்கிற ,,”
மறுமுனையில் சிரித்தபடியே,
“அனுப்பிவைங்க நல்லாயிருந்தா கண்டிப்பா போடுற ,,,”
அதே நம்பிக்கையில்
ஏதோ கிறுக்கி அனுப்பிவிட்டு மறந்து போன அடுத்த வாரம் முகம் மாமணி அவர்களிடம் இருந்து
கடிதம் ,,,வெளியிட தேர்வு செய்திருப்பதாகவும் கூடவே என் புகைப்படம் கேட்டு ….. அந்த
கணம் … இலக்கியவாதி அங்கிகாரம் கிடைத்துவிட்ட மகிழ்ச்சி தலைகால் புரியாமல் வண்ணத்து
பூச்சியாய் என்னை சுற்றியது ……
அந்த நிமிர்ந்தால் வாணம் சிறுகதை உங்களுக்காக …..
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
12:59 AM
1 comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
saravanakumar,
அனுபவம்,
எஸ்.ஏ.சரவணக்குமார்,
கதை,
சமூகம்,
சிறுகதை,
முகம்,
விமர்சனம்
Posted on: Tuesday, January 14, 2014
தினத்தந்தி ஞாயிறு மலரில் " எனது நல்ல மனசு"
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
2:32 AM
1 comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
saravanakumar,
அனுபவம்,
எஸ்.ஏ.சரவணக்குமார்,
கதை,
சமூகம்,
சிறுகதை,
ஞாயிறுமலர்,
தினத்தந்தி
Posted on: Friday, September 27, 2013
இப்படிக்கு, காதல் …
இப்படிக்கு, காதல் …
விடியலில் படுக்கையை விட்டு
எழும் முன்
கடைசி ஐந்து நிமிட
தூக்கத்தைப்போல் சுகமானது
காதல் …..!
இதயம்
தாய்மை அடைந்து தவிக்கும் …!
குழந்தையாய் பிரசவிப்பவள் தாய் ..
முழு மனிதனாய் மறு பிரசவிப்பது, காதல் …!
ஒத்த உணர்வுகள்
தனி உலகில் புணர,
விதவனைப்போல்
தனிமைப்படுத்தி வைத்திருக்கும்
இன்ப அவஸ்த்தை
காதல் …!
நான்
நீ
என்று யாரோவாக இருந்த நாம்,
நான், நீயாகவும்
நீ, நானாகவும்
வளர்சிதை மாற்றத்தால்
“நாம்” ஆக்கிவைக்கும் காதல் ….
நீயும்
நானும்
நாமாக போகும்
வளர்சிதை மாற்றத்திற்காய்
காத்திருக்கிறேன் …
காதலில் காத்திருத்தல்
மட்டுமே பல நூற்றாண்டுகலாய்
காதலை சாகாமல்
வைத்திருக்கிறது என்றாய் ….
காத்திருப்பேன் …
உன் வார்த்தையை
வாழவைக்கவேணும் ….
உனக்காக ….
- எஸ்.ஏ.சரவணக்குமார்
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
2:34 AM
1 comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
அனுபவம்,
எஸ்.ஏ.சரவணக்குமார்,
கவிதை,
காதல்,
சமூகம்,
நிகழ்வுகள்,
விமர்சனம்
Posted on: Thursday, September 26, 2013
உன்னில் தொலைந்த என்னை ….
இரவெல்லாம் ஒட்டி உறவாடி
விடியற் நேரம்
நாணத்தோடு விட்டுப்பிரிய
மனமின்றி
ஒட்டிப்பிரியும்
புல் நுனி பனித்துளி
போல் உன் நினைவுகள் ….
கரை மோதி
காதலியை காணாமல்
ஏமாற்றத்துடன்
கரையிலேயே காத்துக்கிடக்கும்
கடற் நுரை
போல் என் உயிர்
உனக்காக காத்துக்கிடக்கிறது ….!
கொலுசொலியில் பாதை
மயங்கி
கல் தட்டி நகக்கண் பெயர ,
"அம்மா" என்று நான் அலற
"அச்சச்சோ '" என
எனக்கே எனக்காய்
நீ வீசிய பரிவுப்பார்வை ...
அன்று
உன் பார்வை
தந்த போதையில் அடிமையான
என் பாதங்கள்
உன்னை காணும் போதெல்லாம்
பாதையில் கற்க்களை தேடுகின்றன …
மார்கழி மாத பனிக்காற்று
என் முகற்றை வருடும்
பொழுதெல்லாம்….
பேருந்தில் எதேச்சையாய்
என் முகத்தை வருடிய
உன் கூந்தலின் நினைவுகள்
என்னுள் பசலையை
கிளறிவிட்டு
போய்விடுகிறது ….!
நீ குப்பையில் வீசியவைகள்
எல்லாம் பொக்கிசமாய்
என்னுடன் ...
உன் நினைவுகளில்
என்னை நான்
புதுப்பிக்கிறேன் ....
சில சமயம்
தொலைத்துவிட்டு தேடுகிறேன் ...!
ஊர் எல்லையில்
தனியே நிற்கும்
சுமை தாங்கியைப்போல்
சுகமான உன் நினைவுகளை தாங்கி
காத்துக்கிடக்கிறேன் ....
உன்வருகைக்காக …
உன்னில் தொலைந்த
என்னை
என்னிடம் திருபித்தர
என்னிடம் நீ வருவாயா …?
- எஸ்.ஏ.சரவணக்குமார்
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
2:22 AM
1 comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
kavithai,
எஸ்.ஏ.சரவணக்குமார்,
கவிதை,
காதல்,
சமூகம்,
நிகழ்வுகள்,
புனைவுகள்,
விமர்சனம்
Posted on: Tuesday, August 20, 2013
சுயம் தொலைத்தவளே ....!
சுயம் தொலைத்தவளே ....!
இரத்தத்தை அமுதாக்கி
கருவறையில்
பாரம் சுமந்து
உன் வேதனையில்
என்னை வெளிக்காற்றை
சுவாசிக்க வைத்தவளே ...
ஊன் தந்தாய்
உதிரம் தந்தாய்
உயிர் தந்தாய்
நானே உன் உலகம்
என்று ஆனந்தப்பட்டாய் ...
என் கோர முகம்
கோணாதிருக்க
இயல்பு மாற்றி
சுயம் தொலைத்தாய் ...
உன்
உலகை என்னைச்சுற்றி
அமைத்துக்கொண்டாய் ...
வறுமையிலும்
ஈர விறகோடு விறகாய்
பொசுங்கி
என் வயிற்றுப்பசி தீர்க்க
உன்
வயிற்றளவை குறுக்கினாய் ...
நான் மிடுக்காய்
உடை உடுத்தி பள்ளி செல்ல
நீயோ
ஒட்டுடையில் ஆனந்தப்பட்டாய் ....
கருவறையில்
மட்டுமல்ல
நான்
வளரும் போதும்
உன் இரத்தம் குடித்துதான்
வளர்ந்தேன் ...
மனிதனாய் என்னை
வெளியுலகிற்கு
காட்டியவளே ...
இன்று
இரக்கமற்ற முதுமை
உன் உடலை செல்லாய்
அரித்து செல்லாக்காசாய்
படுக்கையில் குழந்தையைப்போல்
கிடத்தியிருக்கிறது ....
எனக்காய் முழுமையாய்
சுயம் மறந்து,
தொலைந்து, கரைந்து
போனவளே ....
உனக்கு நான்
தாயாய் ...
எனக்கு நீ
குழந்தையாய்
ஆகும்
பாக்கியத்தை தவிர
வேறு என்ன
பிரயாசித்தம்
செய்து விட முடியும் ....?
- எஸ்.ஏ.சரவணக்குமார்
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
8:29 AM
3
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
அனுபவம்,
எஸ்.ஏ.சரவணக்குமார்,
கவிதை,
சமூகம்,
நிகழ்வுகள்,
விமர்சனம்
Posted on: Sunday, July 21, 2013
தினமலர் வாரமலரில் ஒரு கைப்பிடி வாழ்க்கை
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
12:26 PM
2
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Posted on: Tuesday, May 28, 2013
தோள் தருவாயா .....?
தோள் தருவாயா .....?
நானறியாமல்
என்னுள் முழுமையும்
நிறைந்தவளே ...
நீ நிறைந்திருக்கும்
எனது கணங்கள்
என்னை எனக்கு
அடையாளப் படுத்துகின்றன ...!
பூ விழுந்தால்
நீ ஜெயித்தாய்
தலை விழுந்தால்
நான் தோற்றேன் ...
நீ விளையாடும் புதிரான
காதல் விளையாட்டு ....
உன்னைப் பார்த்த
கண்களால் எதைப்பார்த்தாலும்
அழகாய் தெரிகின்றன ...
நான் உள்பட ....!
மரணத்திற்கும்
வாழும் ஆசைக்கும்
இடைப்பட்ட மரணசுகம்
உனக்காக காத்திருக்கும்
நொடிகள் ....!
ஊர் கூடி தேர் இழுக்க
நாம் கண்களால்
ஒருவரை ஒருவர்
இழுத்துக்கொண்டோம் ....
புளி மாங்காய்
தேமாங்காய் ...
ஆசிரியர் பாடம் நடத்தும் போது,
எனக்கு நீ கடித்து கொடுத்த
மாங்காய் தான் இலக்கணமாய்
தெரிந்தது .....
இவை எல்லாம்
நேற்று வரை நடந்தவைகள் ....
காதல்
கற்பனையானது ...
அழகானது ....
காதல் மட்டுமாயின்,
காதல் சுகம் ....!
அடுத்த பரிணாமம்
நிஜம் ....!
சுற்றம்
பொருளாதாரம்,
வகுப்பு வாதம் பேசும் ...
சரி .. நமக்கு நாமே
துணையென உறவு பகைத்து
வாழ்கை நடத்தகூட
பொருளாதாரம் அதிமுக்கியம் ....!
அதனால் ,
காதலை நம்முள்
பகிர்ந்துக் கொள்ளும் முன்
சுயகாலில் நின்று ...
நம் வெற்றியை உன்
கன்னங்களுடன் கொண்டாட
விரும்புகிறேன் ...
அதுவரை,
என் உயிர் குடிக்கும்
மாயக்காரியே ....
நான் துவண்டு விழும்
பொழுது எல்லாம்,
உன் பார்வையால்
எனக்கு தோள் தருவாயா ....?
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
10:59 PM
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Posted on: Tuesday, April 9, 2013
கடைசி பிச்சை …(ஏப்ரல் - 15, திருநங்கைகள் தினம் - சிறப்பு கவிதை )
ஊனப்பட்டுப்போன
மனம் படைத்தோர்
வாழும் உலகில் …
சிற்பியின் கவனச்சிதறல்களால்
சிதறிப்போன
கண்ணாடி சிதறல்கள்
நாங்கள்.....
ஊனமனது வார்த்தை
பிரதிபலிப்பால்
சுருங்கி துடிப்பது
"எங்கள் இதயம் மட்டுமல்ல
எங்களின் மனமும் தான் ....!
ஆண்பால் ...
பெண்பால் ...
என்று பிரிக்க தெரிந்த
வக்கிர மனதுக்கு
மூன்றாம் பாலினத்தை
உச்சரிக்க தைரியமில்லை ....!
உடல் ஊனம் என்றால் கூட
செயற்கை உறுப்புகள் உண்டு ...
மன ஊனத்திற்கு ....?
மாற்று பாலினம் என்று
ஒதுக்கியதால்,
பசியரக்கன் முன்
பிச்சைக்காரர்களாய் ...
பால் மாறிப்போனதால்
பாலியல் வெறியர்களில்
பார்வையில் பாலியல்
தொழிலாளியாய் ....
இறைவனை நோவலாம்
என்றால்,
அவனும் கூத்தாண்டவர் கோவிலில்
எங்களுக்கு போட்டியாய் ....
இனி பொறுப்பதில்லை ...
குட்ட, குட்ட குனிந்து
கூன் போட்ட புற முதுகும்
எங்களுக்கு தேவையில்லை ....
மனிதர்கள் வாழ வேண்டிய
பூமியில்
மனிதத்துவம் மறந்து
வாழ்வோரே ...!
உங்களிடம் எங்களின்
கடைசி பிச்சை ....
எங்களை நீங்கள்
மூன்றாவது பாலினமாய்
ஏற்றுக்கொள்ள வேண்டாம் ....
அது எங்கள் உரிமை ...!
தரங்கெட்ட வார்த்தையால்
மனதை காயப்படுத்துவதை
தவிருங்கள் ...!
தெருவில்,
தெரு நாயை கல்லெடுத்து
அடித்தால் கூட,
கேட்க ப்ளூ கிராஷ்
என்று ஓன்று உண்டு ....
எங்களுக்கு ....?
மனிதர்கள் வாழ வேண்டிய
உலகில்
மனிதர்களுடன் மனிதர்களாய்
வாழ ஆசைப்படுகிறோம் ....!
கடைசி பிச்சையாய் ....
சக மனிதா ….!
மனிதர்கள் வாழ வேண்டிய
உலகில்
மனிதனாய் வாழ்வாயா ….?
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
11:14 PM
1 comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
அரவாணி,
அனுபவம்,
எஸ்.ஏ.சரவணக்குமார்,
கவிதை,
சமூகம்,
திருநங்கை,
நிகழ்வுகள்
Posted on: Wednesday, January 2, 2013
காமத்தில் தாய்மை தேடல் ....
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ஒரு போதும் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| காமம் நிறைவடைவதில்லை, | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| தாய்மை தேடலில் …! | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| காமம் ... | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| அது, | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ஆழ் மனதின் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| தாய்மை தேடலில் தோற்ற | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| கண்ணீர் துளிகள் ...! | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பெரிய குழந்தைகளின் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| தாய்மை தேடல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| எப்பொழுதுமே | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| காமத்தில் இருந்துத்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| தொடங்குகிறது .... | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| சில சமயம் காமம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| என தவறாக அர்த்தம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பெண்களின் மார்பின் மீது | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ஆண்களுக்கு ஈர்ப்பு உண்டு ... | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| அது காமத்தை தாண்டி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| தன் தாயின் பால் சுரந்த | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| வெது வெதுப்பின் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| தேடலின் எச்சம் ...! | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| காமம் எப்போதும் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| எல்லோருக்கும் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| காமமாகவே | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| இருந்துவிட முடிவதில்லை ... | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| சில நேரங்களில் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பல நேரம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| மனதிற்கும் காமம் உண்டு, | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| தாய்மை தேடலில் ...! |
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
11:47 AM
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
kavithai,
saravanakkumar,
saravanakumar,
அனுபவம்,
எஸ்.ஏ.சரவணக்குமார்,
கவிதை,
சமூகம்
Posted on: Wednesday, October 17, 2012
கண்ணீரின் சிரிப்பு ....!
பாஞ்சாலியின் அவமானம்
மகாபாரதம்...!
சீதையின் வேதனை
இராமாயணம் ....!
அடிமை வாழ்வின்
கண்ணீர் துளிகள்
சுதந்திர தீ .....!
வலிகள் இல்லாமல்
காயங்கள் இல்லை ...!
காயங்கள் இல்லாமல்
மிதி வண்டி கூட
பழக முடியாது ....!
பாறைகள் தொழப்பட
வேண்டுமானால்,
உளியின் வலி
பொருத்துத்தான் ஆக வேண்டும் ....!
தீயினால் சுடப்படாமல்
தங்கத்தை பட்டை தீட்ட
முடியாது ....!
தோழா ...!
நீ மட்டும் என்ன
விதி விலக்கா ...?
வெத்து ஏட்டில்
மாங்காய் அறுவடை
செய்ய ....?
ஏர் பிடிக்கும் கரங்களும்,
இரும்படிக்கும் தோள்களும்
வாழ்வின் ஆதாரம் ...!
வாழ்வின் சுவராஸ்யம்
பசி ….!
பசியின் போராட்டம்
உழைப்பு ....
உழைப்பின் பயன்
உயர்வு ....!
போராட்டத்தை நேசிக்க
கற்றுக்கொள் ....
உன்னை நாளைய
உலகம் நேசிக்கும் ....!
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
10:09 AM
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
kavithai,
saravanakumar,
அனுபவம்,
எஸ்.ஏ.சரவணக்குமார்,
கவிதை,
சமூகம்,
விமர்சனம்
Posted on: Thursday, August 9, 2012
மரண சுகமடி நீ எனக்கு ....!
மரண சுகமடி நீ எனக்கு ....!
| மாம்பழத்து வண்டைப்போல் |
| தடம் காட்டாமல் |
| உள் புகுந்தவளே ....! |
| வண்டைப்போல் உயிர் |
| குடிக்கிறாய் ... |
| உயிர் குடிக்கும் அந்த |
| மரண சுகம் வேண்டி |
| போதை வஸ்த்து அடிமையைப்போல் |
| உன்னை தேடுகிறேன் ... |
| எனது ஒவ்வொரு |
| கணமும் உன் நினைவுகளால் |
| நிறைந்த்திருக்கிறது ... |
| நீ நிறைந்திருக்கும் |
| எனது கணங்கள் |
| என்னை வாழ தூண்டுகின்றன ....! |
| உறங்கப் போனால் |
| கனவில் நீ வருவாய் |
| என விழித்திருத்தலும் .... |
| தெருவில் நீ வருவாய் |
| என உறங்கப்போவதும் ... |
| மரணத்திற்கும் |
| வாழும் ஆசைக்கும் |
| இடைப்பட்ட மரண சுகமடி |
| நீ ...! |
| காதல் ஒரு ... |
| காதுகளற்ற ... |
| கண்களற்ற .. |
| மூளையற்ற மாற்றுத்திறனாளி ...! |
| வாழ்கை என்பது |
| வாழ ஊக்கமளிக்கும் |
ஊன்று கோள் ...!
ஊன்று கோளாய்
நான் உனக்கும் ...
நீ எனக்கும் ...!
இறுதிவரை
துணைபோவோமா ...?
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
2:20 AM
3
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
kavithai,
saravanakumar,
அனுபவம்,
எஸ்.ஏ.சரவணக்குமார்,
கவிதை,
காதல்,
சமூகம்,
சரவணக்குமார்
Posted on: Tuesday, October 11, 2011
பயணத்திற்கு உதவாத மாய கப்பல் ……….!
பயணத்திற்கு உதவாத மாய கப்பல் ……….!
| கனவுப் போலத்தான் |
| வாழ்க்கை ……! |
| கனவு விடிந்தால் |
| கரைந்து போகும் …. |
| வாழ்க்கை கனவு |
| கலைந்து எழுந்தால் |
| உடன் நடித்த ஒரு |
| கதாபாத்திரம் காணாமல் |
| பேயிருக்கும் ………! |
| பணம், பதவி, மரியாதையெல்லாம் |
| நாம் உண்ணும் உணவைப்போல், |
| ருசிக்க , ருசிக்க பசிக்கும் |
| ஆனால், |
| நிரந்தரமின்றி வீணாய்ப்போகும் ……..! |
| ஆயிரம் பேர் சூழ்ந்திருக்க |
| நான் யார் தெரியுமா? |
| என்று கேட்கும் ஆணவம் |
| அதே கேள்வியை |
| தனிமையில் தன்னை நோக்கி |
| கேட்க ’நான்’ |
| காணாமல் போயிருக்கும் …..! |
| காலுக்கு கீழ் அடிமையைப்போல் |
| கிடக்கும் பூமி, |
| -நிரந்தரமானது ……! |
| நானே எஜமான் என |
| மார்தட்டி திரிந்தவன் |
| மக்கி, மண்ணாய் அதே |
| பூமியோடு ஜக்கியமாவது |
| வாழ்வியல் சூத்திரம் …..! |
| உன்னை |
| எரிக்கலாம், |
| அல்லது, |
| புதைக்கலாம் ………. |
| இதுவரை நீ சேர்த்து வைத்த |
| சொத்துக்கள் …… |
| சொந்தங்கள் …. |
| பதவிகள் ….. |
| அதிகாரங்கள் …. |
| தம்பட்டங்கள் …. |
| அடுத்தவர்களின் வயிற்றெரிச்சல் … |
| ஆசிர்வாதங்கள் …. |
| ஏதேனும் துணைவருமா …. ? |
| தீ சுடும் …! |
| வாழ்ந்தோர் சொல்கேட்டும் |
| தெளியலாம் … |
| தொட்டுப்பார்த்தும் பாடம் கற்கலாம் ….! |
| ஆறடி நிலம் கூட |
| உறுதியில்லாத வாழ்வில், |
| கொண்டு போவதற்கு |
| என்ன இருக்கிறது ….? |
| வாழ்ந்த நாளில் |
| உனக்கு பயந்து எத்தனை பேர் |
| உன்னுடன் வந்தார்கள் |
| என்பது பெரிதில்லை ….. |
| உன் கடைசி யாத்திரையில் |
| கண்ணீருடன் வருகிறவர்களின் |
| எண்ணிக்கை |
| நீ வாழ்ந்த |
| வாழ்க்கையை சொல்லிவிடும் ….! |
| மனிதனாய் பிறப்பது எளிது …. |
| மிருகமாய் வாழ்வது எளிது ….. |
| தெரு நாயைப்போல் |
| செத்துப்போவது எளிது ….. |
| நீ |
| மனிதனா ….? |
| மிருகமா ….? |
| உன் கடைசி யாத்திரையில் |
| கண்ணீருடன் வருகிறவர்களின் |
| எண்ணிக்கை நீ வாழ்ந்த |
| வாழ்க்கையை சொல்லிவிடும் …. |
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
6:19 PM
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
kavithai,
saravanakumar,
அனுபவம்,
எஸ்.ஏ.சரவணக்குமார்,
கவிதை,
சமூகம்,
நிகழ்வுகள்,
விமர்சனம்
Posted on: Thursday, September 29, 2011
எனக்கே, எனக்காக .. கண்ணீரோடு காதல் சொல்லிப்போ ...
நன்றி பதிவர் தென்றல் செப்டம்பர் 2012
இடமாற்றுப் பிழை நீ எனக்கு ....
கடவுள் அப்படி ஒன்றும்
நல்லவனில்லை ....
பிறர் துன்புறுவதை கண்டு
இன்புறும் கொடிய
மனம் படைத்தவன் ....
இல்லாதிருந்தால்,
உயிரின் பகுதியே ...!
உன்னை படைத்தவன்
என்னையும் படைத்திருப்பனா ...?
பொய்கள் எல்லாம் மெய்களாய் ,
மெய்கள் பொய்களாய்
மாறிப்போன இடமாற்றுப் பிழை
நீ ....
இரவில் வரும் நிலவில்
ஆரம்பித்து
மாலை வரும் தென்றல் வரை
உன் நினைவுகளை என்னுள்
பதியமிட தவறுவதில்லை ...
விடியற் நேரம்
துளிர்க்கும் புல் நுனி
பனித்துளி கண்டு
என் பசலையில் துளிர்த்த
உன் கண்ணீர்த் துளியோ என
என் மனம் உடைந்து அழுகிறது ...
பொய்யில் மெய் கண்டு
பொய் என தெரிந்தும்
பொய்யாய் வாழும் சுகம் தேடி
உன் நினைவு போதையில்
திரிவதும்
ஒரு வகை தவம் தான் ...!
தவத்திற்கு தவமேற்றி
இந்த உடல் உயிரை
அடைந்து முழுமை பெற
என் உயிரின் ஆதாரமே ...!
நீ வா ...
அல்லது,
எனக்காக ...
எனக்கே, எனக்காக …
ஒரே ஒரு துளி
கண்ணீரோடு காதல்
சொல்லிப்போ ...
கவிஞனாய்
வாழ்ந்துவிட்டுப் போகிறேன் ...!
இடமாற்றுப் பிழை நீ எனக்கு ....
கடவுள் அப்படி ஒன்றும்
நல்லவனில்லை ....
பிறர் துன்புறுவதை கண்டு
இன்புறும் கொடிய
மனம் படைத்தவன் ....
இல்லாதிருந்தால்,
உயிரின் பகுதியே ...!
உன்னை படைத்தவன்
என்னையும் படைத்திருப்பனா ...?
பொய்கள் எல்லாம் மெய்களாய் ,
மெய்கள் பொய்களாய்
மாறிப்போன இடமாற்றுப் பிழை
நீ ....
இரவில் வரும் நிலவில்
ஆரம்பித்து
மாலை வரும் தென்றல் வரை
உன் நினைவுகளை என்னுள்
பதியமிட தவறுவதில்லை ...
விடியற் நேரம்
துளிர்க்கும் புல் நுனி
பனித்துளி கண்டு
என் பசலையில் துளிர்த்த
உன் கண்ணீர்த் துளியோ என
என் மனம் உடைந்து அழுகிறது ...
பொய்யில் மெய் கண்டு
பொய் என தெரிந்தும்
பொய்யாய் வாழும் சுகம் தேடி
உன் நினைவு போதையில்
திரிவதும்
ஒரு வகை தவம் தான் ...!
தவத்திற்கு தவமேற்றி
இந்த உடல் உயிரை
அடைந்து முழுமை பெற
என் உயிரின் ஆதாரமே ...!
நீ வா ...
அல்லது,
எனக்காக ...
எனக்கே, எனக்காக …
ஒரே ஒரு துளி
கண்ணீரோடு காதல்
சொல்லிப்போ ...
கவிஞனாய்
வாழ்ந்துவிட்டுப் போகிறேன் ...!
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
3:10 PM
2
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
அனுபவம்,
எஸ்.ஏ.சரவணக்குமார்,
கவிதை,
காதல்,
சமூகம்,
நிகழ்வுகள்,
பதிவர் தென்றல்
Posted on: Wednesday, September 28, 2011
தாம்பத்தியம் போல் சுயம் கொண்டது முதுமை ...!
வாழ்க்கையும் வாழ்பவர்களும் .....
முதுமை வாழ்வின்
மொழி...!
வாழ்பவர்களுக்கு
வாழ்ந்தவர்களின் வழிகாட்டி...!
வாழ்க்கை சுழற்சியின்
இரண்டாவது குழந்தை பருவம்
முதுமை...!
தான் பெற்ற குழந்தையிடமே
தான் குழந்தையாகி போகும்
பரிணாமம் ...!
தாம்பத்தியம் போல்
சுயம் கொண்டது முதுமை ...!
அனிச்ச மலராய்
மனமிருந்தாலும்
வாடுவதை யாரும்
பொருட்படுத்துவதில்லை ....!
சுருங்கிய முகத்தை விட
சுனோ பூசிய முகம்
ஈர்ப்பானதால்,
இரும்பு இதயத்தை பெற்றவர்கள்
இரும்பு கட்டிலில்
முதியோர் இல்லத்தில் ....!
கிரிச்சில் மகன் ...
முதியோர் இல்லத்தில் பெற்றோர் ...
வெந்ததை அவசரகதியில்
அள்ளிப்போட்டு,
எட்டு மணி பஸ்ஸை பிடித்து,
சம்பாதித்து என்ன
செய்ய போகிறோம் ...?
நாளை
எதோ ஒரு முதியோர் இல்லத்தில்
எதோ ஒரு இரும்பு கட்டிலில்
படுத்துக் கிடக்கவா...?
மனிதா ...!
வாழ்க்கை அழகிய கவிதை ....
கூச்சலிடும் குழந்தைகள் ...
கூடத்தில் "டொங் டொங்.." என
வெற்றிலை தட்டியபடியே
அளவாடும் பெற்றோர் ...
தோட்டத்தில்,
துள்ளி குதித்து திரியும் அணில் ...
நினைத்திடவே ஆனந்தம்
பெருகுகிறது ...
வாழ்க்கையை வாழ்ந்து
பார்க்க வேண்டும் ...
நாட்களை நகர்த்திப் போவது
பாவம் ...!
வாழ்கையை வாழாமல்
வெந்ததை தின்று
பணத்தின் பின் திரிதல்
பிணத்திற்கு சமம் ...!
நாளைய நமது
முதுமை சுகமாய் இருந்திட ,
நமது குழந்தைகளுக்கு
நாம் தான் கூட்டுக் குடும்ப
வாழ்க்கையை சுவைக்க
கொடுக்க வேண்டும் ...!
வாழ்க்கை அழகான கவிதை ...!
கூச்சலிடும் குழந்தைகள் ..
கூடத்தில் அனுபவ முதிய பெற்றோர் ...
மிகவும் ஆதரவாய், பாதுகாப்பாய்
உணரும் நம் மனம் ...!
வாழ்க்கை சுழற்சியின்
அழகிய பருவம்
முதுமை ..!
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
3:58 PM
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
saravanakkumar,
அனுபவம்,
எஸ்.ஏ.சரவணக்குமார்,
கவிதை,
சமூகம்,
நிகழ்வுகள்
Posted on: Tuesday, July 5, 2011
பாக்யா வார இதழில் சாயம் போட்ட மனிதர்கள்
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
5:25 PM
7
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
saravanakkumar,
அனுபவம்,
எஸ்.ஏ.சரவணக்குமார்,
சமூகம்,
சிறுகதை,
பாக்யா
Posted on: Tuesday, June 28, 2011
கல்கி வார இதழில் நிறைவேறிய எனது ஏக்கம்...
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
4:10 PM
3
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
kavithai,
saravanakkumar,
அனுபவம்,
எஸ்.ஏ.சரவணக்குமார்,
கல்கி,
கவிதை
Posted on: Monday, May 23, 2011
கல்யாண சந்தையில் பாக்யா வார இதழ்
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
6:55 PM
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
அனுபவம்,
எஸ்.ஏ.சரவணக்குமார்,
சிறுகதை,
பாக்யா,
விமர்சனம்
Posted on: Thursday, April 14, 2011
பாக்யா வார இதழின் பார்வையாளர்கள் நேரம்
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
3:18 PM
4
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
அனுபவம்,
எஸ்.ஏ.சரவணக்குமார்,
சிறுகதை,
பாக்யா
























