Pages

Posted on: Thursday, September 26, 2013

உன்னில் தொலைந்த என்னை ….


                             உன்னில் தொலைந்த என்னை ….


இரவெல்லாம் ஒட்டி உறவாடி
விடியற் நேரம்
நாணத்தோடு விட்டுப்பிரிய
மனமின்றி
ஒட்டிப்பிரியும்
புல் நுனி பனித்துளி
போல் உன் நினைவுகள் ….

கரை மோதி
காதலியை காணாமல்
ஏமாற்றத்துடன்
கரையிலேயே காத்துக்கிடக்கும்
கடற் நுரை
போல் என் உயிர்
உனக்காக காத்துக்கிடக்கிறது ….!

கொலுசொலியில் பாதை
மயங்கி
கல் தட்டி நகக்கண் பெயர ,
"அம்மா" என்று நான் அலற
"அச்சச்சோ '" என
எனக்கே எனக்காய்
நீ வீசிய பரிவுப்பார்வை ...

அன்று
உன் பார்வை
தந்த போதையில் அடிமையான
என் பாதங்கள்
உன்னை காணும் போதெல்லாம்
பாதையில் கற்க்களை தேடுகின்றன …

மார்கழி மாத பனிக்காற்று
என் முகற்றை வருடும்
பொழுதெல்லாம்….
பேருந்தில் எதேச்சையாய்
என் முகத்தை வருடிய
உன் கூந்தலின் நினைவுகள்
என்னுள் பசலையை
கிளறிவிட்டு
போய்விடுகிறது ….!

நீ குப்பையில் வீசியவைகள்
எல்லாம் பொக்கிசமாய்
என்னுடன் ...

உன் நினைவுகளில்
என்னை நான்
புதுப்பிக்கிறேன் ....

சில சமயம்
தொலைத்துவிட்டு தேடுகிறேன் ...!

ஊர் எல்லையில்
தனியே நிற்கும்
சுமை தாங்கியைப்போல்
சுகமான உன் நினைவுகளை தாங்கி
காத்துக்கிடக்கிறேன் ....
உன்வருகைக்காக …

உன்னில் தொலைந்த
என்னை
என்னிடம் திருபித்தர
என்னிடம் நீ வருவாயா …?

                                                     - எஸ்.ஏ.சரவணக்குமார்

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

/// தொலைத்துவிட்டு தேடுகிறேன்... ///


அருமை... வாழ்த்துக்கள்...

Post a Comment

 
Tweet