Pages

Posted on: Wednesday, October 17, 2012

கண்ணீரின் சிரிப்பு ....!

 

 

 

 

 

 

 பாஞ்சாலியின் அவமானம்

மகாபாரதம்...!

சீதையின் வேதனை

இராமாயணம் ....!

அடிமை வாழ்வின்

கண்ணீர் துளிகள்

சுதந்திர தீ .....!

வலிகள் இல்லாமல்

காயங்கள் இல்லை ...!

காயங்கள் இல்லாமல்

மிதி வண்டி கூட

பழக முடியாது ....!

பாறைகள் தொழப்பட

வேண்டுமானால்,

உளியின் வலி

பொருத்துத்தான் ஆக வேண்டும் ....!

தீயினால் சுடப்படாமல்

தங்கத்தை பட்டை தீட்ட

முடியாது ....!

தோழா ...!

நீ மட்டும் என்ன

விதி விலக்கா ...?

வெத்து ஏட்டில்

மாங்காய் அறுவடை

செய்ய ....?

ஏர் பிடிக்கும் கரங்களும்,

இரும்படிக்கும் தோள்களும்

வாழ்வின் ஆதாரம் ...!

வாழ்வின் சுவராஸ்யம்

பசி ….!

பசியின் போராட்டம்

உழைப்பு ....

உழைப்பின் பயன்

உயர்வு ....!

போராட்டத்தை நேசிக்க

கற்றுக்கொள் ....

உன்னை நாளைய

உலகம் நேசிக்கும் ....!

0 comments:

Post a Comment

 
Tweet