Pages

Posted on: Wednesday, September 28, 2011

தாம்பத்தியம் போல் சுயம் கொண்டது முதுமை ...!








 வாழ்க்கையும் வாழ்பவர்களும் .....


 
 
 
 
 
முதுமை வாழ்வின்

மொழி...!

வாழ்பவர்களுக்கு
வாழ்ந்தவர்களின் வழிகாட்டி...!

வாழ்க்கை சுழற்சியின்
இரண்டாவது குழந்தை பருவம்
முதுமை...!

தான் பெற்ற குழந்தையிடமே
தான் குழந்தையாகி போகும்
பரிணாமம் ...!

தாம்பத்தியம் போல்
சுயம் கொண்டது முதுமை ...!

அனிச்ச மலராய்
மனமிருந்தாலும்

வாடுவதை யாரும்
பொருட்படுத்துவதில்லை ....!

சுருங்கிய முகத்தை விட
சுனோ பூசிய முகம்
ஈர்ப்பானதால்,

இரும்பு இதயத்தை  பெற்றவர்கள்
இரும்பு கட்டிலில்
முதியோர் இல்லத்தில் ....!

கிரிச்சில் மகன் ...

முதியோர் இல்லத்தில் பெற்றோர் ...

வெந்ததை அவசரகதியில்
அள்ளிப்போட்டு,
எட்டு மணி பஸ்ஸை பிடித்து,
சம்பாதித்து  என்ன
 செய்ய  போகிறோம் ...?

நாளை
எதோ ஒரு முதியோர் இல்லத்தில்
எதோ ஒரு இரும்பு கட்டிலில்
படுத்துக் கிடக்கவா...?

மனிதா ...!
வாழ்க்கை அழகிய கவிதை ....

கூச்சலிடும் குழந்தைகள் ...
கூடத்தில் "டொங் டொங்.."  என
வெற்றிலை தட்டியபடியே
அளவாடும் பெற்றோர் ...
தோட்டத்தில்,
துள்ளி குதித்து திரியும் அணில் ...

நினைத்திடவே ஆனந்தம்
பெருகுகிறது ...

வாழ்க்கையை வாழ்ந்து
பார்க்க வேண்டும் ...

நாட்களை  நகர்த்திப் போவது
பாவம் ...!

வாழ்கையை வாழாமல்
வெந்ததை தின்று
பணத்தின் பின் திரிதல்
பிணத்திற்கு சமம் ...!

நாளைய நமது
முதுமை சுகமாய் இருந்திட ,

நமது குழந்தைகளுக்கு
நாம் தான் கூட்டுக் குடும்ப
வாழ்க்கையை சுவைக்க
கொடுக்க வேண்டும் ...!

வாழ்க்கை அழகான கவிதை ...!

கூச்சலிடும் குழந்தைகள் ..
கூடத்தில் அனுபவ முதிய பெற்றோர் ...
மிகவும் ஆதரவாய், பாதுகாப்பாய்
உணரும் நம் மனம் ...!

வாழ்க்கை சுழற்சியின்
அழகிய பருவம்
முதுமை ..!

0 comments:

Post a Comment

 
Tweet