Pages

Posted on: Wednesday, April 14, 2010

இடுகாட்டில்  காத்திருப்பேன்..!






இடுகாட்டில் காத்திருப்பேன்..!





என்னைக் கொண்டே
என் மூளை
செல்களுக்குள்
உன் பெயரை
பச்சை குத்திக்கொண்டவளே...!

உன்னுள் கரைந்து
உன் காதலில் நான்
தாய்மை அடைந்தேன்!

என் மனம்
உன்னால் குப்பையாய் போனதால் ,
நீ தீண்டி குப்பையில்
போட்டவைகள் எல்லாம்
பொக்கிசமாய் என் அறையில்..!

சிவந்து சிரிக்கும்
முற்றத்து ரோஜா...

தாவி ஓடும்
கொல்லைப்புற அணில் குட்டி ..

ஒவ்வொரு நிகழ்வும்
நொடிக்கொருதரம்
உன் நினைவுகளை
என்னுள் புதுப்பித்துக்கொண்டே
இருக்கிறது …!

எல்லா பெண்களையும்
போல் தானே நான் ,
என்னிடம் புதுமையாய்
எதை கண்டாய்
என ஏளனமாய் கேட்டாய் ...

பிரியமே..!
என்னை உன்னில்
மட்டும் தானே காண முடிகிறது...?

வாழும் போது ஒருவராய்
வாழும் நாம்..
மரிக்கும் போது மட்டும்
நான் சிறிது
முந்திக்கொள்ள ஆசைப்படுகிறேன் ...

உனக்கு முன்
நான் மரித்து,
மக்கி, மண்ணாகி
உன்னை மலர்ப்போல்
தாங்க,
இடுகாட்டில் காத்திருப்பேன்... !

4 comments:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

சீமான்கனி said...

கவிதை மனசுக்குள்ள புகுந்து ஏதோ செய்கிறது...
ஜில்லுனு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்...

முனைவர் இரா.குணசீலன் said...

நன்றாகவுள்ளது கவிஞரே.

Post a Comment

 
Tweet