Pages

Posted on: Monday, March 5, 2012

தினமலர் வாரமலரில் நாளை என்பது ...






நாளை என்பது ...




 நாளை என்பது
உடலை உயிரோடு
ஒட்டி வைக்கும் நம்பிக்கை!

இன்றைய பசியை,
நாளை கிடைக்கப்போகும்
உணவு பசியாற்றாது...
ஆனால்,
நம்பிக்கையூட்டும்!

நாளை
விருட்சமாவோம் என்ற
நம்பிக்கையில் தான்
பிரமாண்ட மரம் கூட,
சிறு விதையுள்
தன்னை சுருக்கி
தவம் கிடக்கிறது!

நாளைய நம்பிக்கைதான்
இன்றைய அவமான
வலிகளுக்கெல்லாம் மருந்து!

நம்பிக்கை இழந்தவன்
தன்னை இழந்தவன்!

நேற்றைய விதைப்பே
இன்றைய உணவு!

அறுவடைகள்
காலதாமதமாகலாம்
ஆனால்,
பொய்ப்பதில்லை!

மரத்திற்கு பழம்
சுமையாகலாம்
ஆனால்,
நீ, உனக்கு சுமையாகக் கூடாது!

அடுத்த நொடியும்
உயிர் வாழ்வோம் என்ற
நம்பிக்கைதான்
வெளிவிட்ட காற்றை
மீண்டும் நுரையீரல்
நிறைக்கிறது!

நம்முன், தட்டில் கிடக்கும்
ஒவ்வொரு பருக்கையும்
அடுத்த நொடி நாம்
உயிரோடு இருந்து
உண்ணப் போகிறோம்
என்ற நம்பிக்கையின்
வெளிப்பாடு!

வா... நாளையை
ஒரு கை பார்ப்போம்...
உள்ளர்ப்பணத்தோடு
உழைப்போம்!

நாளை - உன் வீட்டு
வேலைக்காரனாகும்!

நாளை என்பது
உடலை உயிரோடு
ஒட்டி வைக்கும்
நம்பிக்கை பசை!

3 comments:

ஆமினா said...

நம்பிக்கை வரிகள் :-)

இடைவெளிகள் said...

நம்பிக்கை இறைந்து கிடக்கும் கவிதைச்சாலை. வாழ்த்துக்கள்

இடைவெளிகள் said...

நம்பிக்கை இறைந்து கிடக்கும் கவிதைச்சாலை. வாழ்த்துக்கள்

Post a Comment

 
Tweet