Pages

Posted on: Friday, November 23, 2012

என் முதல் காதலியை இழந்து விட்டேன் …..



வயசாயிட்டாவே …. இனி புரோயோஜனம் இல்லன்னு தெரிஞ்சிட்டா … கூடவே, மேனா மினுக்கியா ஒருத்தி வந்துட்டா … அது வரை கை கோர்த்து கூட வந்தவளை அப்படியே விட்டுட்டு போறதுதானே மனித கூட்டம்..? நான் மட்டும் விதிவிலக்கா என்ன…?

என் காதலியை பிரியும்படியா ஆயிடிச்சு.  அதுவும் பதினோரு வருசமா … என் கூட இளைச்சிக்கிட்டு வந்தவள … என் மனைவி கூட எனக்காக இப்படிலா கஸ்டப்பட்டதில்ல .... 

நான் மழைல நனையும்போது நனைந்து, வேகாத வேயில்ல எனக்காக வாசல்லயே காத்து கிடந்து, என்னை பார்த்த மாத்திரத்துல அதுவரை பட்ட கஸ்டத்தை எல்லாம் மறந்துட்டு காதலோட ஒரு 'லுக்' விடுவா பாருங்க … அது வரை ஆபிஸ்ல இருந்த டென்சன்லா ஒடிபோய் அப்படியே ஜில்லுன்னு ஆயிடும்.  அப்படியே பாசத்தோட அவள வருடிக்கிட்டே, ஆபிஸ் விசயத்தலா அவாகிட்ட சேர் பண்ணிக்கிட்டு வீடு வந்து சேர்ரது …நாளைக்கான புதுவேகத்தை கொடுக்கும்! 

காதலை வேற யாரும் எனக்கு இப்படி காதலோட. தாய் பாசத்தோட சோல்லி கொடுத்தது இல்லை….

மனசே கேக்கல. அவளை அப்படியே அங்க விட்டுட்டு, புது மேனா மினுக்கியோட வெளிய வரும் போது…. தானே தன் கனவனுக்கு ரெண்டாவது திருமணம் செஞ்சிவச்சிட்டு அவங்க ஜோடியா வெளிய போகும் போது வழி அனுப்பிவைக்கிற மனைவி மாதிரி … என்னை பார்த்து 'வுட்டுட்டு போறீயா?' ன்ற மாதிரி ஒரு லுக் விட்டா பாருங்க பச்! என் உயிர் என்கிட்டயே இல்ல …

சந்தோசமோ, கோபமோ முதல்ல அவக்கிட்டத்தான் காட்டியிருக்க … அதுக்காக அவா ஒருவாட்டி கூட மொகத்த காட்டுனதுயில்ல … 'கௌம்பு'ன்னா போதும் சந்தோசமா கௌம்பிடுவா …

என் மகன் எனக்குமேல 'பீல்' பண்ணி அவளை கெட்டிபிடிச்சு கிஸ் பண்ணிட்டு, மனசே இல்லாம வந்தான்.

"இதுக்கு மேல இதை ரிப்பேர் பார்க்க முடியாது சார்"ன்னு மெக்கானிக் சண்டைக்கு வந்த பிறகு, வேற வழியே இல்லாமத்தான் என் பழைய டி,வி,எஸ் விக்டரை கொடுத்துட்டு புது டூ வீலர் வாங்கும்படியா ஆயிடிச்சு. 

புது காதலிபுது நட்பு!! ஆனாலும் முதல் காதலை மறக்க முடியாமல்....

4 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமையாகச் சொன்னீர்கள்
வண்டி மாற்ற நேர்கையில்
முதல் வண்டியுடன் நாம் கொண்ட
பல சுகந்த நினைவுகள் மனத்தை
ஆக்கிரமிக்கத்தான் செய்கிறது
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்

semmalai akash said...

ஆஹா!! உங்க வண்டிய எந்த அளவுக்கு நேசித்து இருப்பிங்க என்று புரிகிறது, ஆனால் அதை இவ்ளோ அழகா சொல்லிருக்கீங்க பாருங்க இங்கதான் கைதட்டல்கள் கிடைக்கிறது உங்களுக்கு..

பாராட்டுகள் நண்பரே!
இதுபோல் நல்ல நல்ல பதிவுகளை கொடுங்கள். இதோ உங்களை பின்தொடர்கிறேன்.

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

நன்றி இரமணி சார்!

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

நன்றி ஆகாஷ் !

Post a Comment

 
Tweet