Pages

Posted on: Friday, July 3, 2009

தொலைந்து போனவன் ...!












ஏக்கம்...!


பின்புற தோட்டத்து
மாமர ஒற்றை கிளையில்
குயில் கச்சேரி.....
தத்தி, தாவி
நடனமிடும் அணில்,
இரசித்திட ஆசை...
ஞாயிறு வருமென
சமாதனம் சொன்னது
இயந்திர வாழ்க்கை....!

*************************
தொலைந்து போனவன் ...!


பரணில்
பள்ளி பருவத்தில்
வாங்கிய கோப்பைகளுக்கு
மத்தியில்,
கோப்பைகளாய்
தூசி படிந்து கிடக்கிறது ....
வாழ்க்கை பயணத்தில்
தொலைத்திட்ட இலட்சியங்கள் ....!

*********************

முரண்....!


மோட்டு கூரை
பிய்ந்து வீட்டிற்குள்
பட்டு தெறிக்கும்
மழைத் தூளி கண்டு
துள்ளி குதித்து
குதுகளித்தது
மழலை மனம்....!
வறுமை என
பிதற்றிக்கிடந்தது ....
இயந்திர வாழ்வில்
சுயம் தொலைத்த மனம்...!

5 comments:

Muthukumaran said...

//வாழ்க்கை பயணத்தில்
தொலைத்திட்ட இலட்சியங்கள் ....!//
Romba arumai ya

நையாண்டி நைனா said...

என்னை கானாததாலே, என்னை பத்தி ஏக்கமா எழுதி இருக்கும் புள்ளை என்று பார்த்தால் இப்படியா....

உன் கூட டூ...

போடுரண்டி உனக்கு எதிர் கவிதை...

நேசமித்ரன் said...

மிகவும் பயனுள்ள ஆழமான பதிவு
உங்கள் பதிவு தொடரட்டும்

நேசமித்ரன் said...

நல்ல கவிதை
நல்ல கரு
வாழ்த்துக்கள்

"உழவன்" "Uzhavan" said...

//ஞாயிறு வருமென
சமாதனம் சொன்னது
இயந்திர வாழ்க்கை....! //

இப்படித்தானே இன்று வாழ்கிறோம். அருமை

Post a Comment

 
Tweet