Pages

Posted on: Thursday, January 27, 2011

தினமலர் வாரமலரில் நான் வாழ்ந்த வாழ்கை

நன்றி தினமலர் வாரமலர் 23/01/2011




வா வாழ்ந்து பார்க்கலாம் …!





வாழ்கை அழகான கவிதை …
வாசிக்கவும் ​செய்யலாம்..
கசக்கி தூர
வீசவும் ​செய்யலாம் …!

உயிர் சுழற்சி
காமம் சம்மந்தப்பட்டது…..!

காமம் மனம் சம்மந்தப்பட்டது…..!

அடுத்தவனின் மரணம்
தரும் பயம்
வாழ்கையை ​சொல்லித்தரும் …!

பயந்த மனம் பயத்தில்
இறந்த கால நினைவுகளில்
ஆறுதல் தேடும் ..!

எதிர்கால கனவில்
ஒளிந்துக்​கொள்ள பார்க்கும் …!

நிகழ்காலம் மட்டும்
எட்டிக் காயாய் ….

தன்னை பதிவு செய்துக்​கொள்ளும்
போராட்டத்தில்
பல முகங்கள் சூடி
தான் ​தொலைந்து போன
பரிதாபம் …

வீணான மிச்சங்கள்
கூட சில உயிர்களுக்கு
உணவாகும் ……
வீணாய் முடங்கிக்கிடப்பவன்
தனக்கே சுமையாவான் ….!

முட்டி, முட்டி ஓட்டை
உடைத்துத்தான்
கோழி குஞ்சு கூட
வெளிக்காற்றை சுவாசிக்கிறது…..

உன் வாழ்கை
உன் முன்னே…

வாழ்கை அழகான கவிதை …
வாசிக்கவும் ​செய்யலாம்..
கசக்கி தூர
வீசவும் ​செய்யலாம் …!

கடைசி நாளில்
சிலரின் சில கண்ணீர் துளிகள்
தான்
வாழ்ந்த நாளில்
நாம் சேர்த்து ​வைத்த சொத்து ……!

வா மனிதனாய்
வாழ்ந்து பார்க்கலாம் …!

2 comments:

"உழவன்" "Uzhavan" said...

Vazhthukal :-)

இடைவெளிகள் said...

நிறைய தன்னம்பிக்கைகளை உள்வைத்து அதை அழகிய கவிதை எனும் பொட்டலங்களாக்கி மற்றவர்களுக்கு படிக்க வைத்திருக்கும் நண்பருக்கு நன்றியைத்தவிர வேறென்ன விலை தர முடியும்.
கவிதை கனகச்சிதம்.

Post a Comment

 
Tweet