Pages

Posted on: Friday, January 28, 2011

நாளை என்பது ...!



நாளை என்பது ...!





நாளை என்பது
உடலை உயிரோடு
ஒட்டிவைக்கும் நம்பிக்கை...!

இன்றைய பசியை
நாளை கிடைக்கப்போகும்
உணவு பசியாற்றாது....
ஆனால்,
நம்பிக்கையூட்டும் ....!

நாளை
விருட்சமாவோம் என்ற
நம்பிக்கையில் தான்
பிரமாண்ட மரம் கூட
சிறு விதையுள்
தன்னை சுருக்கி
தவம் கிடக்கிறது  ...!

நாளைய நம்பிக்கைத்தான்
இன்றைய அவமான
வலிகளுக்கெல்லாம் மருந்து ...!

நம்பிக்கை இழந்தவன்
தன்னை இழந்தவன் ...!

நேற்றைய விதைப்பே
இன்றைய உணவு ...!

அறுவடைகள்
காலதாமதமாகலாம்
ஆனால்,
பொய்ப்பதில்லை ...!

மரத்திற்கு பழம்
சுமையாகலாம்
ஆனால்,
நீ உனக்கு சுமையாக கூடாது ...!

அடுத்த நொடியும்
உயிர் வாழ்வோம்  என்ற
நம்பிக்கைத்தான்
வெளிவிட்ட காற்றை
மீண்டும் நுரை ஈரல்
நிறைக்கிறது....!

நம்முன் தட்டில் கிடக்கும்
ஒவ்வொரு பருக்கையும்
அடுத்த நொடி நாம்
உயுரோடு இருந்து
உண்ண போகிறோம்
என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு ...!

வா ... நாளையை
ஒரு கை பார்ப்போம் ...!

உள்ளர்ப்பனத்தோடு  உழை ...!

நாளை, உன் வீட்டு
வேலைக்காரனாகும் ...!

நாளை என்பது
உடலை உயிரோடு
ஒட்டிவைக்கும்
நம்பிக்கை பசை ...!

1 comments:

நிலாமதி said...

எவ்வளவு ஆத்மார்த்மான் நம்பிக்கை தரும் வரிகள்.

பாராடுக்கள் .

Post a Comment

 
Tweet