Pages

Posted on: Thursday, September 29, 2011

எனக்கே, எனக்காக .. கண்ணீரோடு காதல் சொல்லிப்போ ...

நன்றி பதிவர் தென்றல் செப்டம்பர் 2012



இடமாற்றுப்   பிழை  நீ எனக்கு ....


 
 
 
 
 
 
கடவுள் அப்படி ஒன்றும்
நல்லவனில்லை ....

பிறர் துன்புறுவதை கண்டு
இன்புறும் கொடிய
மனம் படைத்தவன் ....

இல்லாதிருந்தால்,

உயிரின் பகுதியே ...!
உன்னை படைத்தவன்
என்னையும் படைத்திருப்பனா ...?

பொய்கள் எல்லாம் மெய்களாய் ,
மெய்கள் பொய்களாய்
மாறிப்போன இடமாற்றுப் பிழை
நீ ....

இரவில் வரும் நிலவில்
ஆரம்பித்து
மாலை வரும் தென்றல் வரை
உன் நினைவுகளை என்னுள்
பதியமிட தவறுவதில்லை ...

விடியற் நேரம்
துளிர்க்கும் புல் நுனி
பனித்துளி கண்டு
என் பசலையில் துளிர்த்த
உன் கண்ணீர்த் துளியோ  என
என் மனம் உடைந்து அழுகிறது ...

பொய்யில் மெய் கண்டு
பொய் என தெரிந்தும்
பொய்யாய் வாழும் சுகம் தேடி
உன் நினைவு போதையில்
திரிவதும்
ஒரு வகை தவம் தான் ...!

தவத்திற்கு தவமேற்றி
இந்த உடல் உயிரை
அடைந்து முழுமை பெற
என் உயிரின் ஆதாரமே ...!

நீ வா ...

அல்லது,

எனக்காக ...
எனக்கே, எனக்காக …
ஒரே ஒரு துளி
கண்ணீரோடு காதல்
சொல்லிப்போ ...

கவிஞனாய்
வாழ்ந்துவிட்டுப் போகிறேன் ...!

2 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

எனக்காக ...
எனக்கே, எனக்காக …
ஒரே ஒரு துளி
கண்ணீரோடு காதல்
சொல்லிப்போ ...

கவிஞனாய்
வாழ்ந்துவிட்டுப் போகிறேன் ...!


அருமையான கவிதை..

மகேந்திரன் said...

இடமாறு தோற்றப்பிழையை
காதலியுடன் இணைத்து
மீண்டும் அறிவியல் கவிஞன் என
பறைசாற்றி இருக்கிறீர்கள்.
நன்று.

Post a Comment

 
Tweet