Pages

Posted on: Thursday, October 8, 2009

வாலிபத்தின் தாய்மடி …!



வாலிபத்தின் தாய்மடி …!



தனிமை இனிக்கும் ...!
உனக்கே நீ பரிச்சயமாவாய்...!

சீரும் நாகத்தை கூட
அழகாய் இருக்கிறது
என்று இரசிக்க தோன்றும்...

இரவெல்லாம் கவி எழுத
முயன்று இறுதியில்
அவள் உருவம் வரைந்து
தலைப்பாய்
அவள் பெயர் எழுதி
பெரும் கவியாகிவிட்டதாய்
காலரை தூக்கிவிட்டுக்கொள்ளும் ....

மழலைக்கு தாய் ...!
இளைஞனுக்கு காதலி ..!
முழுமைக்கும் மனைவி ...!
காதலின் பரிணாமங்கள்..!

காதல் வாழ்க்கையின் மொழி ..!
கவிதை காதலின் வித்து ..!

குழந்தையாய் பிரசவிப்பவள் தாய் ...!
கவிஞனாய் மறு பிரசவிப்பவள் காதலி...!!

அதனால்,
காதலியுங்கள் ….

உனக்கே நீ
பரிச்சயமாக...
உன்னையே நீ
அறிந்துக்கொள்ள ....

காதல் வயப்படல் ஒன்றும்
பாவமில்லை ....
காமமில்லா காதலை
தாய்ப்பாசத்துடன் நீ
அணுகுவதாயின் ....!

8 comments:

vasu balaji said...

ரொம்ப அழகு கவிதை.

நேசமித்ரன் said...

:)மனமார்ந்து வாசிக்க முடிந்தது நண்பரே

விஜய் said...

கவிஞனாய் மறு பிரசவிப்பவள் காதலி...!!

மிக அழகு

விஜய் said...

மிக அழகு

ஹேமா said...

சரவணன் வணக்கம்.பல கவிதைகளூடே பரவி வந்தேன்.அத்தனையும் அழகாய் உருவெடுத்திருக்கிறது உங்கள் உணர்வோடு.இன்னும் வருவேன்.வாழ்த்துகள்.

அனுபவம் said...

இப்படியெல்லாம் அசத்துறீங்க????
அருமை நண்பரே!

துபாய் ராஜா said...

//காதல் வயப்படல் ஒன்றும்
பாவமில்லை ....
காமமில்லா காதலை
தாய்ப்பாசத்துடன் நீ
அணுகுவதாயின் ....! //

மீண்டும் மீண்டும் படிக்க வைத்த கவிதை.

அருமை நண்பரே....

புலவன் புலிகேசி said...

அழகு கவிதை

Post a Comment

 
Tweet