Pages

Posted on: Wednesday, December 16, 2009

மூன்றாவது செவி ...!  



மூன்றாவது செவி ...!



படுக்கையில் கூட 
இரண்டாவது மனைவியாய்
அருகாமை,
தவிர்க்க முடியவில்லை...!

எப்பொழுதும் உடனிருந்து 
கட்டளையிடும் 
எஜமானனாய் ...!

குனிந்து பெருக்கும்
எதிர் வீட்டு பெண்ணின் 
கலைந்த ஆடைகளுக்கு 
இடையே,
தவிர்க்க, தவிர்க்க 
அனிச்சையாய் போகும் 
கண்களைப்போல்...
இடைஞ்சலாய் உணர்ந்தாலும் 
தவிர்க்க முடியவில்லை...!

சண்டை போடாத 
மனைவியை அடைந்தவன் போல்,
 வாழ்க்கை   சுவராஸ்யம்
இழந்து போகிறது...!

சினுங்கா அலைபேசி 
காதலி இல்லாமல் 
கடற்கரை மணலில் 
தனிமையில் காத்திருத்தல் போல்...!  

7 comments:

vasu balaji said...

/சினுங்கா அலைபேசி
காதலி இல்லாமல்
கடற்கரை மணலில்
தனிமையில் காத்திருத்தல் போல்...! /

:)). நல்லா இருக்குங்க.

Chitra said...

சண்டை போடாத
மனைவியை அடைந்தவன் போல்,
வாழ்க்கை சுவராஸ்யம்
இழந்து போகிறது...!
.........எப்படியெல்லாம் யோசிக்க வைக்குறாங்க..........ஹா, ஹா, ஹா,.......

சிவாஜி சங்கர் said...

/சினுங்கா அலைபேசி
காதலி இல்லாமல்
கடற்கரை மணலில்
தனிமையில் காத்திருத்தல் போல்...! //அருமையான வரி

அண்ணாமலையான் said...

சண்டை போடாத
மனைவியை அடைந்தவன் போல்,..” அவனால சந்தோஷமா வண்டி ஓட்ட முடியுமா..?

சிநேகிதன் அக்பர் said...

கவிதை மிக அருமை.

ஹேமா said...

சண்டை பிடிச்சத்தான் வாழ்க்கை சுவாரஸ்யம்.
இல்லாட்டி வெறும் சப்ன்னு இருக்கும்.

சீமான்கனி said...

அடடே அலைபேசி...அமாம்ம்ம்ம்ம்...நிஜம்தான்....அருமை...

Post a Comment

 
Tweet